திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளன. காரணம் தேமுதிகவும், பாமகவும் தங்களது நிலையை முடிவு செய்யாததே.இரு கட்சிகளையும் இழுக்க திமுக, அதிமுக ஆகியவை பல வழிகளில் படு தீவிரமாக உள்ளன. ஆனால் கழுவிய நீரில் நழுவிய மீன் போல இரு கட்சிகளும் தங்களது பேரத்தில் பிடிவாதமாக இருப்பதால் இரு கட்சிகளையும் சேர்த்துக் கொள்வதில் திமுக, அதிமுக தரப்பில் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் நிலையை இன்று காஞ்சிபுரத்தில் அறிவித்தார். இன்று பிற்பகல் அவர் காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பெருமளவில் திரண்டிருந்த தேமுதிக தொண்டர்களுக்கு மத்தியில் விஜயகாந்த் பேசினார்.

பலத்த வரவேற்புக்கு மத்தியில் விஜயகாந்த் பேச்சை தொண்டர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். தொண்டர்கள் கடலுக்கு மத்தியில் விஜயகாந்த் பேசுகையில்,

பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், நான் வருகிற 26ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன்.தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்யப் போகிறேன். நான் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளேன். யாருடனும் கூட்டணி சேர மாட்டேன்.

நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள். ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை கொடுக்க ஏற்பாடு செய்வேன் என்றார் விஜயகாந்த்.தனித்துப் போட்டி என்ற முடிவை விஜயகாந்த் அறிவித்து விட்டதால் அரசியல் களத்தில் நிலவி வந்த பெரும் குழப்பத்திற்கு பெரும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக முதல் முறையாக மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் பல முக்கிய பிரச்னைகள் மத்திய அரசின் மூலமே தீர்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக, காவிரி நதிநீர் பங்கீடு, பாலாற்று அணை, முல்லைப் பெரியாறு நீர் தேக்கம், ராமேஸ்வரம் மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்னை போன்றவை மத்திய அரசின் மூலமே தீர்க்கப்பட வேண்டும். இதுவரையில் இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகத்துக்கென உள்ள தனிப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையிலும், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஊழல் போன்றவற்றைப் போக்கும் வகையிலும் மக்களவைத் தேர்தல் வெற்றியின் மூலம் தேமுதிக முக்கிய கடமையாற்ற வேண்டியுள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

மத்திய அரசின் மூலமாக மட்டுமே என்ற வார்த்தையை தேமுதிக அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்ததால் கூட்டணிக்கு விஜயகாந்த் தயாராகி விட்டதாக கருதப்பட்டது.ஆனால் மக்களுடன்தான் கூட்டணி என்று விஜயகாந்த் இன்று கூறியுள்ளார். இருப்பினும் நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியுள்ளது சூசகமாக எதையோ உணர்த்துவது போல உள்ளதாக கருதப்படுகிறது.இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் மறைமுகமாக விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கலாம் என்று கருதப்படுகிறது.

வன்னிப் பிரதேசத்தில் பல முனைகளிலிருந்தும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.முல்லைத்தீவு மாவட்டத்தில் இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் புதன்கிழமை இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி முன்னகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் மிகக்குறுகிய இடைவெளியில் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.இதேவேளையில் இரணைப்பாலை அமலன் வெதுப்பகச்சந்தி, டயர் கடைச் சந்தி ஆகிய இடங்களில் புதன்கிழமை முன்நகர்வில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட்டது. இதில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றனர்.

மந்துவில் சந்தி பகுதியை நோக்கி இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.ராணுவ கமாண்டோக்கள் இந்த முன்நகர்வில் ஈடுபட்டனர். ஆனால் புலிகளின் கடுமையான தாக்குதலால் ஏஅது முறியடிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு சிவன் கோவிலடிக்கு அருகாமையில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. இரண்டு ராணுவத்தினரின் உடல்களையும், படையினரின் ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர்.

நன்றி
தட்ஸ் தமிழ்

ிறு‌த்தை மறுத்தது ஏன்?
மாம்பழம்-இலைக் கட்சி கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், ஈழப் பிரச்னையில் தன்னுடன் தோளோடுதோள் நின்று கூட்டாக குரல் கொடுத்து வந்த சிறுத்தைத் தலைவரையும் தன்பக்கம் அழைத்திருக்கிறார் மருத்துவர். ஆனால், அறிவாலயக் கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணமில்லை என அவர் மறுத்துவிட்டாராம்.

ஏற்கனவே ஆளுங்கட்சியின் தொடர் நெருக்கடிகளால் நொந்து போயிருந்த அவரை, தற்போது அறிவாலயத் தரப்பு கவனிக்க வேண்டிய வகையில் கவனித்து திருப்தி செய்து விட்டதாம். முன்பு ’40’ என்று கிண்டலடித்தவர்கள் இம்முறை ’23’ என்று நக்கல் செய்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.

***

‘தாராள நிதி’ பட்டுவாடா!
கூட்டணி பேரத்தில் படிய தயக்கம் காட்டும் கட்சிகளை இழுக்கும் பொறுப்பு, முன்னாள் அமைச்சரான பேரனிடம் ஒப்படைத்திருக்கிறாராம் அவரது தாத்தா.

அந்த வகையில் சிறுத்தைத் தலைவரை தங்கள் கூண்டில் ஏற்ற வேண்டிய பொறுப்பை கச்சிதமாக நடத்தி முடித்துவிட்டாராம், தாராள நிதி கொண்ட அந்த முன்னாள் அமைச்சர். அடுத்து யாரை வளைக்க வேண்டும் என்று தலைவரிடம் கேட்டு, அவரது உத்தரவிற்காகக் காத்திருக்கிறாராம். இதற்கான ‘நிதி’ பட்டுவா செய்யும் பொறுப்பையும் அவரே ஏற்றிருப்பதாகக் கேள்வி.

***

அம்மா போட்ட நிபந்தனை!
தோட்டத்துப் பக்கம் சாய்ந்துவிட்ட மருத்துவருக்கு, அவர் கேட்டபடியே தொகுதிகளை ஒதுக்கித்தர மே(லி)டம் ஒப்புக் கொண்டார்களாம். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம்.

எதிர் முகாமைச் சேர்ந்த தலித் தலைவர், தில்லையரசனின் ஊரில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து மாம்பழக் கட்சியும் கட்டாயம் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே அம்மாவின் அன்பு உத்தரவாம்.

நன்றி வெப் துனியா…

டெல்லி சென்றுள்ள தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணிச் செயலாளரும் விஜய்காந்தின் மச்சானுமான சுதீஷ் ஆகியோர் அங்கு தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமத் படேல் ஆகிய மூத்த காங்கிரஸ் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுவர் என்று தெரிகிறது.திமுக, அதிமுகவை எதி்ர்க்கும் விஜய்காந்துக்கு விழும் வாக்குகளில் பெரும்பாலானவை தனது வாக்குகள் என்று கருதும் காங்கிரஸ், தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட தீவிரமாக உள்ளது.

இது தொடர்பாக விஜய்காந்த் தரப்புடன் மறைமுகமாக பேச்சி நடத்தி வருகிறது.இந் நிலையில் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தங்களது கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையச் செயலாளரை சந்திக்க பண்ருட்டி ராமச்ச்திரனும் சுதீசும் டெல்லி வந்துள்ளனர்.

செயலாளரை சந்தித்து அவர் கோரிக்கையும் வைத்தனர். ஆனால் சின்னம் குறித்து இப்போதே முடிவு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. வரும் 27ம் தேதி இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால் அங்கு சென்று முறையிடுமாறு ஆணையம் தெரிவித்துவிட்டது.இதைத் தொடர்ந்தும் டெல்லியிலேயே தங்கியுள்ள ராமச்சந்திரன், சுதீசுடன் காங்கிரஸ் தரப்பு சில நபர்கள் மூலம் பேச்சு நடத்தியது. அப்போது தங்களது கட்சிக்கு கோவை, கள்ளக்குறிச்சி, வேலூர், உள்ளிட்ட 8 தொகுதிகளை ஒதுக்கும்படி தேமுதிக தரப்பு கோரியதாகத் தெரிகிறது.

ஆனால், தேமுதிக தரப்பு கோரிய பல தொகுதிகளும் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகள் என்பதால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தத் தொகுதிகளை விட்டுத் தர இயலாதே என்று காங்கிரஸ் கூறியதையடுத்து அப்படியென்றால் கூட்டணியும் சாத்தியமாகாதே என்று தேமுதிக தரப்பு கூறியதாகத் தெரிகிறது.இதையடுத்து தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டுவிட்டு மற்ற தொகுதிகளில் மட்டும் போட்டியிட முடியுமா என்று தேமுதிகவிடம் காங்கிரஸ் பேச ஆரம்பித்துள்ளது. தான் நிற்கும் தொகுதிகளி்ல் தேமுதிக நிற்காவிட்டால் தனக்கு போட்டி குறையம் என காங்கிரஸ் கருதுகிறது. இதைப் பற்றி யோசிக்க விஜய்காந்த் தயாராக உள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து இன்று மீண்டும் பண்ருட்டி, சுதீசுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தலாம் என்று தெரிகிறது. கூட்டணியா அல்லது காங்கிரசுக்கு சாதமாக போட்டியா என்பது குறித்து இதில் பேசப்படவுள்ளது.இதில் எதுவும் சரிப்படாவிட்டால் தனித்து நிற்கவும் தேமுதிக ரெடி தான் என்கிறார்கள். அதே நேரத்தில் அதிமுகவும் விஜய்காந்துக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் டெல்லியில் பண்ருட்டி ராமச்சந்திரனை நிருபர்கள் சந்தித்தபோது, கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பேசி வருவதால், வரும் 21ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் என்றார்.காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினீர்களா என்று கேட்டதற்கு, அழைப்பு வந்தது உண்மை. ஆனால், இதுவரை பேச்சு ஏதும் நடக்கவில்லை என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆனார்.

இந் நிலையில் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்தாவது விஜய்காந்தை கூட்டணிக்குள் எப்படியும் இழுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக சுதீசும் பண்ருட்டியும் நடத்தும் பேச்சுக்கள் முன்னேற்றமடைந்தால் விஜய்காந்தே டெல்லிக்கு விரைந்து சோனியை சந்தித்து கூட்டணியை முடிவு செய்வார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.இல்லாவிட்டால் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து காங்கிரஸ்-தேமுதிக தொகுதி பங்கீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவின் கோட்டை போல திகழ்ந்த தென் மாவட்டங்கள் பக்கம் ஜெயலலிதா தனது கவனத்தை தீவிரமாக திருப்புகிறார். இந்த முறை தென் மாவட்டங்களில் அதிக அளவில் போட்டியிட்டு அவற்றை அதிமுகவின் கோட்டை என நிரூபிக்க அவர் உறுதியுடன் இருக்கிறார்.எம்.ஜி.ஆருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே கை கொடுத்த தெய்வங்களாக இருந்தவை தென் மாவட்டங்கள்தான். அவர் நடிகராக இருந்தபோதும் சரி, பின்னர் அதிமுகவைத் தொடங்கிய பின்னரும் சரி, தென் மாவட்டங்கள் அதிமுகவின் எஃகுக் கோட்டையாக திகழந்தன.திண்டுக்கல் தொகுதியில் நடந்த இடைத் தேர்தல்தான் அதிமுகவின் முதல் வெற்றிக்குப் பிள்ளையார் சுழி போட்டதாகும். அங்கு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மாயத் தேவர்.

எனவே தென் மாவட்டங்கள் மீது எம்.ஜி.ஆரும் தனிப் பாசத்துடன் இருந்தார். அதேசமயம், வட மாவட்டங்கள், குறிப்பாக சென்னை உள்ளிட்டவை திமுகவுக்கு கோட்டை போல இருந்தன.ஆனால் இந்த நிலை கடந்த சில வருடங்களாக மாறிப் போய் விட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்கள்தான் அதிமுகவை கடுமையாக கவிழ்த்து விட்டன. மாறாக சென்னையின் பல தொகுதிகளை அதிமுக கைப்பற்றி, திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.இந்த நிலையில் மீண்டும் தென் மாவட்டங்கள் பக்கம் தனது தீவிர கவனத்தை ஜெயலலிதா செலுத்தியிருப்பதாக தெரிகிறது.

இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன ..

இலங்கைப் பிரச்சினை. இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழகத்தின் வட பகுதிகளை விட தென் மாவட்டங்களில்தான் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாபம் அதிகம் உள்ளது. இப்பகுதிகளில் பெருமளவில் போராட்டங்கள் நடந்துள்ளதை இது காட்டுகிறது.

மேலும், காங்கிரஸ் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் கைகழுவும் வகையில் நடந்து கொண்டது தென் மாவட்டங்களில்தான் அதிக அளவிலான கண்டனத்தை ஈர்த்துள்ளது.இலங்கைக்கு அருகில் உள்ள பகுதிகள் என்ற அடிப்படையிலும், ஆரம்பத்திலிருந்தே ஈழப் பிரச்சினையில் தென் தமிழக மக்கள் அதீத பாசத்துடன் இருந்து வருவதாலும், காங்கிரஸ் மீது இந்தப் பகுதிகளில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும், கோபமும் காணப்படுகிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா நினைப்பதாக தெரிகிறது. எனவே இந்தப் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்யும்போது இலங்கைப் பிரச்சினையை பெரிதாக கிளப்புவார் எனத் தெரிகிறது.அடுத்து, திமுக கூட்டணியின் வடிவம். திமுக கூட்டணியில் பாமக சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து விட்டது. ஒரு வேளை பாமக திமுக அணியில் இணைந்தால், வட மாவட்டங்களில் திமுக கூட்டணி பலமாகி விடும்.

பாமகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தென் பகுதிகளில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. அங்கு புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தலித் வாக்குகளைப் பிரிக்கக் கூடிய நிலையில் உள்ளார். அவர் தற்போது அதிமுக அணியில் இடம் பெற தீவிரமாக உள்ளார். ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அவர் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே பாமக, விடுதலைச் சிறுத்தைகள் திமுக அணியில் இடம் பெற்றிருப்பதால், வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களி்ல் அதிக கவனம் செலுத்தினால் லாபம் அதிகம் என்பது ஜெயலலிதாவின் கணக்கு.

மேலும் தென் மாவட்டங்களில் உள்ள எம்.ஜி.ஆர். வாக்கு வங்கி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. பலர் விஜயகாந்த் பக்கம் திரும்பியுள்ளனர். இருப்பினும் முற்றிலும் அது அதிமுகவுக்குப் பாதமாக மாறி விடவில்லை. ஒரு வேளை விஜயகாந்த் அதிமுக பக்கம் வந்தால் நிச்சயம் தென் மாவட்டங்கள் மீண்டும் அதிமுக கோட்டையாகும் என்றும் நினைக்கிறார் ஜெயலலிதா.தென் மாவட்டங்களில்தான் அதிமுகவுக்கு அதிக சீட்கள் கிடைக்கும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உளவுப் பிரிவு தகவல்கள் கூறுகிறதாம்.எனவே கடந்த முறையை விட இந்த முறை கூடுதலான இடங்களில் தென் மாவட்டங்களி்ல அதிமுக போட்டியிடலாம்.

கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகத்தின் வடக்கு, மேற்கு அல்லது மத்தியப் பகுதிகளி்ல் அதிக சீட்களை ஒதுக்கி விட்டு தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளி்ல அதிமுக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.மதுரை உள்ளிட்ட சில கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளையும் கூட அதிமுகவே எடுத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதிமுக இப்படிக் கணக்குப் போடும் என்று எதிர்பார்த்துத்தான் மு.க.அழகிரியை தென் மண்டல அமைப்புச் செயலாளராக ஏற்கனவே நியமித்துள்ளார் கருணாநிதி. மேலும், அவர் மதுரையில் போட்டியிடக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அழகிரி தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் அவரது ஆதரவாளர்கள், மதுரையில் மட்டுமல்லாது தென் மாவட்டங்கள் முழுவதிலும் திமுக அணியை வெற்றி பெற வைக்க உயிரைக் கொடுத்து உழைப்பார்கள் என்பது உறுதி.எனவே திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இந்தத் தொகுதிகளைக் கைப்பற்றுவதில் கிட்டத்தட்ட போரே நடைபெறும் சூழ்நிலை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தப்பி ஓடவில்லை. அவர் வன்னியில் பதுங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.போர் முற்றி, பல பகுதிகளை ராணுவம் பிடித்து விட்டதால் மலேசியாவுக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ பிரபாகரன் தப்பிப் போயிருக்கலாம் என இலங்கை மீடியாக்கள் சில செய்தி வெளியிட்டன.

ஆனால் பிரபாகரன் தப்பவில்லை. அவர் வன்னிப் பகுதியிலேயே பதுங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், பிரபாகரன் வன்னிப் பகுதியில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.பிரபாகரன் அப்பகுதியில் இருப்பதால்தான் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம்.தற்போது விடுதலைப் புலிகள் வசம் 35 சுதர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியே உள்ளது. இந்த பகுதியில்தான் பிரபாகரன் பதுங்கியிருக்கக் கூடும்.

புதுக்குடியிருப்பைச் சுற்றிலும் கடும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இது எத்தனை நாள் நீடிக்கும், எப்போது புதுக்குடியிருப்பு வீழும் என்று தெரியவில்லை (முன்னதாக புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாக இரண்டு முறை ராணுவம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது).கடந்த வாரம் புதுக்குடியிருப்பில் உள்ள புலிகளின் மருத்துவமனை பிடிபட்டது. அங்கிருந்த புலிகளின் காவல் நிலையமும் பிடிக்கப்பட்டது என்றார் நாணயக்காரா.இதற்கிடையே, ராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதில்லை என்று பிரபாகரன் உறுதி எடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலிய வானொலிக்கு அளித்த விடுதலைப் புலிகள் இயக்க செய்தித் தொடர்பாளர் திலீபனும், பிரபாகரன் எங்கும் ஓடவில்லை. போர் முனையில்தான் இருக்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அனைவரும் வீரர்களுடன் சேர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் போரில் தமிழ் மக்களை‌ப் படுகொலை செய்து வரு‌ம் இலங்கை அரசு‌க்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய நாடுகள் அவை‌யின் மனித உரிமைகளுக்கான ஆணையர் கலாநிதி நவநீதம் பிள்ளை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெனீவாவில் நேற்று கலாநிதி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் ராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. பொது மக்கள் தங்கியுள்ள இடங்கள் மீதும் குண்டுகளை வீசி வருகின்றது.அப்பாவி‌த் தமிழர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாகவும், தப்பிச் செல்ல முயற்சிப்பவர்களை சுட்டுக் கொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்கள் சிறுவர்களை பலாத்காரமாக இயக்கத்தில் சேர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தகைய செயல்கள், ச‌ர்வதேச மனித உரிமை, மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானவை. இவை போர் குற்றங்களாகவும் கருதப்படும்.நட‌ந்து வரும் மோதல்களில் கடந்த ஜனவரி 20 ஆம் தே‌தி‌யில் இருந்து இதுவரை 2 ஆயிரத்து 800 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட்டோ‌ர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு வளய பகுதிக்குள் இருந்தவர்கள் ஆவர். நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பலியாகி உள்ளனர். இவ்வளவு குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இதே ரீதியில் போர் நீடித்தால், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை பேரழிவு நிலைக்கு சென்று விடும் என்று அஞ்சுகின்றோம். உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடும், மனிதாபிமான சூழ்நிலையை மேலும் சீர்குலைத்து விடும்.

எனவே, அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையும் இதர த‌ன்னா‌ர்வ அமைப்புக்களும் நிலைமையை கண்டறிய அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடியில் இருந்து சுரண்டைக்கு செல்லும் வழியில் கம்பிளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் யாரோ மர்ம மனிதன் இரவில் நடமாடுவதாகவும், அவன் மனிதர்களை கடித்து தின்பவன் எனவும் பொதுமக்கள் இடையே சில நாட்களாக பேசப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் கடந்த வாரம் கம்பிளி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து ஊருக்கு வடக்கே உள்ள சப்பாணி முத்து கோவில் அருகில் இரவில் சென்றுக் கொண்டிருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் அவரது கையை பிடித்துக் கடிக்க முயன்றானாம். உடனே பேச்சிமுத்து அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டார்.

அடுத்த நாள் பகலில் அதே இடத்தில் ஆய்க்குடியை சேர்ந்த கோழிக்கடை மாரிமுத்து மகன் மூர்த்தி என்பவரது கையை பிடித்து மர்ம மனிதன் கடிக்க முயற்சி செய்தானாம்.இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் பிடிபடவில்லை. வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் இரவில் பிடித்து விசாரித்தனர். இதில் அவருக்கு தொடர்பு இல்லை என தெரிந்ததால் அவரை அனுப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேச்சிமுத்து கூறியதாவது, எனக்கு சொந்த ஊர் கம்பிளி. நான் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகின்றேன். ஒருநாள் நான் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக மல்லராமக்குளக்கரையில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது இரவு 9 மணி இருக்கும். ஒரு ஆலமரம் அருகே சென்றபோது ஒரு மர்ம ஆசாமி திடீர் என்று வந்து எனது கையை பிடித்து கடிக்க முயன்றான். அவனிடம் நீ யார் என்று கேட்டேன். அவன் பதில் கூறவில்லை. மேலும் எனது கையை பிடித்து இழுத்தான். நான் அவனை குளத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவந்துவிட்டேன்.இப்போது அதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த மறுநாளே ஆய்க்குடியை சேர்ந்த மூர்த்தி என்பவரையும் இதே போல் தாக்கி உள்ளான். எனவே போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்.

அவர்கள் வந்து தேடினர். ஆனால் அவன் சிக்கவில்லை. அவன் மனித மாமிசத்தை உன்பவனாக இருக்கலாம் என்றார்.இந்த சம்பவம் ஆய்க்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சிலர் இது வெரும் வதந்தியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இரவில் தனியாக வெளியில் வர பயப்படுகின்றனர்

நன்றி தட்ஸ் தமிழ்

மக்களவைத் தேர்தலில் தன்னுடன் கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் நச்சரித்து வரும் நிலையில் அதைத் தவி்ர்க்கவே விஜய்காந்த் விரும்புவதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனியாக நின்று 8.33 சதவீத வாக்குகளை வாங்கிக் காட்டி திமுக, அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சி தந்தார் விஜய்காந்த்.மேலும் தன்னை வெகுவாக எதிர்த்த பாமகவை அதன் கோட்டையான விருத்தாசலத்திலேயே வென்று வன்னியர் கோட்டையில் பாமகவுக்கு பெரும் அரசியல் சறுக்கலை ஏற்படுத்திக் காட்டினார்.

மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தபோது, அப்படிப்பட்ட செலவேதும் செய்யாமலேயே சுமார் 13,000 வாக்குகளை வாங்கிக் காட்டினார் விஜய்காந்த்.தேமுதிகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது போய் காங்கிரசுடன் கூட்டணி வைத்து இத்தனை நாட்களாய் தான் விமர்சித்து வந்த திமுகவுடன் கைகோர்க்க வேண்டுமா என்ற கேள்வி விஜய்ரகாந்துக்கு எழுந்துள்ளது.

அரசியலில் உடனடி பதவி, அதிகாரம், லாபம் பார்க்க இவரது கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் ஆசையோடு அலைந்தாலும் விஜய்காந்த் மிக நிதானமாகவே உள்ளார்.இந்த மக்களவைத் தேர்தலிலும் தனித்து நின்று 10 முதல் 15 சதவீதம் வாக்குகளை வாங்கிக் காட்டினால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை விட்டுவிட்டு காங்கிரஸ் தன்னுடன் நேரடியாக கூட்டணிக்கு வந்துவிடும் என்பது விஜய்காந்தின் கணக்கு என்கிறார்கள்.அப்படி காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் பெருவாரியான இடங்களில் வென்றுவிட முடியும் என்று விஜய்காந்த் தரப்பு கருதுவதாகத் தெரிகிறது.

இன்னும் இரண்டு வருடத்தில் இப்படி ஒரு வாய்ப்பு வரப் போகும் நிலையில் சில எம்பி தொகுகளுக்காக காங்கிரசுடன் கைகோர்த்து, திமுக கூட்டணிக்குள் நுழைந்து தேவையில்லாமல் நமது செல்வாக்கை நாமே சீர்குலைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை கூட்டணி ஆர்வத்துடன் தன்னை சந்தித்த கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் விஜய்காந்த் கேட்டதாகத் தெரிகிறது.விஜய்காந்தை எப்படியாவது காங்கிரஸ் இழுத்து வந்து தன்னையும் காப்பாற்றிவிடும் என்று திமுக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தேமுதிகவுக்கு அதிமுகவும் தூது விட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரசுடனாவது கூட்டணி குறித்து ஆலோசிக்கத் தயாராக உள்ள விஜய்காந்த், அதிமுகவுடன் கூட்டு என்பதை பரிசீலிக்கக் கூட தயாராக இல்லை. இதை அதிமுக தரப்புக்கு தெளிவாகவே சொல்லிவிட்டது தேமுதிக.அதே போல திமுகவையும் அதிமுகவுக்கு இணையான அதே சம தூரத்தில் வைக்கவே விஜய்காந்த் விரும்புகிறார்.சட்டமன்றத் தேர்தலை குறி வைத்து தான் தேமுதிகவை ஆரம்பித்தார் விஜய்காந்த். சட்டமன்றத்தைப் பொறுத்தவரை தேமுதிகவுக்கு போட்டி என்பது அதிமுக, திமுகவுடன் தான்.

இதனால் இந்த இரு கட்சிகளுடன் கூட்டு வைப்பதைப் பற்றிய சிந்தனையே அவருக்கு இல்லை என்கிறார்கள். இப்போது காங்கிரஸ் மூலமாக திமுக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் அது 2011 சட்டசபை தேர்தலில் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துள்ள விஜய்காந்த், இந்தத் தேர்தலில் கூட்டணியை விரும்பவில்லை.ஆனாலும் அடுத்து வரும் தேர்தல்களை சமாளிக்க பதவி அதிகாரம், பணம் இருந்தால் தான் நல்லது என்று கூறி அவரை கூட்டணிக்கு ஒப்புக் கொள்ள வைக்கும் முயற்சிகளி்ல் சில முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசுதான் காரணம் எ‌ன்று பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியுள்ளா‌‌ர்.

பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரம், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கியது.நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எல்.கே.அத்வானி பேசியதாவது:
இலங்கையில் வாழும் தமிழர்கள், மலேசியாவில் வாழும் தமிழர்கள் தொடர்பாக கவலைப்படும் தமிழக மக்களை நான் பாராட்டுகின்றேன்.இலங்கையில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம்.அவர்களை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கையில் கொல்லப்படும் தங்கள் சகோதரர்களுக்காக படும் வேதனைகளை, கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.பாகிஸ்தானில் இருந்து வருகிற பயங்கரவாதமானாலும் சரி, வங்காளதேசத்தில் இருந்து வரும் தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் பிரச்சனையாக இருந்தாலும் சரி இவை அனைத்திலும் காங்கிரஸ் அரசு நிர்வாகம் தோற்றுப்போய்விட்டது.

எனவே, முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமர் கையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் ‌நினை‌த்தா‌ல், வருகிற தேர்தலில் பா.ஜனதா‌வி‌ற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அத்வானி.